#ElectionBreaking: போடிநாயக்கனுரில் 3வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்த ஓ.பன்னீர்செல்வம்.!

Published by
பாலா கலியமூர்த்தி

போடிநாயக்கனுர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடுவதற்காக மூன்றாவது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்த ஓ.பன்னீர்செல்வம்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனுர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடுவதற்காக காளியம்மன் கோவிலில் வழிபாடு செய்த பின்னர் வட்டாச்சியர் அலுவலகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேட்பு மனு தாக்கல் செய்தார். போடி தொகுதியில் 3வது முறையாக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடப்படுகிறது.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக வெற்றி வேட்பாளராக போடிநாயக்கனுர் தொகுதியில் போட்டியிடுவதற்கு கழக தலைமை ஆணையிட்டிருந்தது. அதனை ஏற்று இன்று நான் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

கடந்த 2011-ஆம் ஆண்டு போடி சட்டமன்ற தொகுதியில் முதல் முதலில் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கி அப்பகுதி மக்கள் அமோக வெற்றியை தந்தார்கள். அந்த தேர்தலில் நான் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் அரசாணை மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளன. மக்களின் அடிப்படை தேவைகளை செய்துள்ளேன்.

இரண்டு முறை என்னை பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்தார்கள். அந்த நம்பிக்கையின் அடிப்படையில், மக்களுக்கு சேவை புரிவதே குறிக்கோளாக கொண்டு மீண்டும் அந்த தொகுதியில் களமிறங்கியுள்ளேன். மக்கள் எனக்கு தொடர்ந்து ஆதரவு தருவார்கள் என்று நம்பிக்கை உள்ளது. மேலும், தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக மகத்தான வெற்றி பெரும் என கூறியுள்ளார்.

கடந்த 10 ஆண்டு காலமாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி சிறப்பான ஆட்சியை நடத்தியுள்ளோம். ஆகையால், மீண்டும் அம்மாவின் அதிமுக ஆட்சியை அமைய செய்வார்கள் என கூறியுள்ளார். இதனிடையே, போடிநாயகனுர் தொகுதியில் திமுக சார்பாக போட்டியிடும் தங்கத்தமிழ்செல்வனை எதிர்த்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

8 minutes ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

1 hour ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

16 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

17 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

17 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

18 hours ago