தமிழகத்தில் தமிழர்களுக்கே வேலைவாய்ப்பு என பல்வேறு சிறப்புகளை கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்ட மதிமுக.
தமிழக சட்டபேரவை தேர்தலை முன்னிட்டு அதிமுக, திமுக, அமமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில், தேர்தல் பிரச்சாரத்திலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திமுக கூட்டணி கட்சியான மதிமுக தற்போது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ளார்.
அதில், தமிழை மத்திய ஆட்சி மொழியாகவும், நீதிமன்ற வழக்காடு மொழியாகவும் அறிவிக்க பாடுபடுவோம். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற குரல் கொடுப்போம். வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தல். ஏழு தமிழர் விடுதலைக்கு குரல் கொடுப்போம். சேலம், சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்துவோம்.
உச்ச நீதிமன்றத்தின் கிளையை தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அமைத்திடவும், சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளையை கோவையில் அமைத்திடவும் குரல் கொடுப்போம். தமிழகத்தில் இந்தி, சம்ஸ்கிருதத்தை திணிக்கப்படுவதை மதிமுக எதிர்க்கும். கல்வியை பொதுப்பிரிவிலிருந்து மாநில பட்டியலுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் தமிழர்களுக்கே வேலைவாய்ப்பு, முழு மதுவிலக்கை கொண்டு வருவது என பல்வேறு அம்சங்கள் இருக்கும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். காவேரி டெல்டாவை பாலைவனமாக்க ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதித்திருப்பது கண்டிக்கத்தக்கது, தமிழக நலன்களுக்கு எதிராக பாஜக அரசுக்கு கள்ளத்தனமாக அதிமுக துணைபோகிறது என வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…
டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…