கோவையில் உணவுக்காக வீடுகளை உடைத்து சாப்பிடும் யானையை பிடித்து வனப்பகுதியில் விட பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று உணவுக்காக அங்குமிங்கும் சுற்றி அமைந்துள்ளது. பகல் வேளையில் மக்கள் குடியிருக்க கூடிய பகுதிகளில் நுழைந்து அந்த யானை தனக்கு கிடைத்த உணவுகளை உண்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வனப்பகுதிக்கு மக்கள் அளித்த புகாரின் பேரில் அவர்கள் யானையை காட்டுக்குள் விரட்டி உள்ளனர். இதனைத் தொடர்ந்து காட்டுக்குள் சென்ற யானை மீண்டும் மருதமலை பகுதியிலேயே சுற்றி வந்துள்ள நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் திடீரென அந்த யானை குமரன் அருகில் வசித்து வரும் செந்தில் என்பவரின் வீட்டை இடித்து அங்கிருந்து அரிசி, பருப்பு, புளி போன்ற உணவுப்பொருட்களை சாப்பிட்டுள்ளது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு அங்கேயே தங்கி இருந்த யானையை பொதுமக்கள் உதவியுடன் செந்தில்குமார் காட்டுக்குள் விரட்ட முயன்றுள்ளார். அதன்பின் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் வெகு நேரம் கழித்தே சம்பவ இடத்திற்கு வந்து யானையை விரட்டியதாக கூறப்படுகிறது. ஏதும் அசம்பாவிதம் நடைபெறும் முன்னரே யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்றுவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக (திமுக) அரசு, தமிழ்நாட்டில் தனது ஆட்சியின் ஐந்தாவது ஆண்டில்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள்…
சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாகப் பணியாற்றிய டாக்டர் சலாஹுத்தீன் முகமது அயூப் (84) மே 24, 2025 அன்று…
அஹமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமாக விளையாடி வந்த சென்னை அணி புள்ளி விவரப்பட்டியலில் கடைசி இடத்துடன் வெளியேறியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் அமலாக்கத்துறை தொடர்ச்சியாக பல இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், புதுக்கோட்டையில் மே 24-அன்று…
அமெரிக்கா : பிஃபா (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபன்டினோ, கிறிஸ்டியானோ ரொனால்டோ அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் ஃபிஃபா கிளப் உலகக் கோப்பை…