கடந்த சில நாட்களுக்கு முன் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருக்கும் 11 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும், கொரோனா பாதிப்பால் 9 வயது சிங்கம் ஒன்று இறந்த சம்பவம் சோகத்தை அளித்தது. இதன் காரணமாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் முதுமலை, டாப்சிலிப் முகாமில் இருக்கும் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் ஏற்பாடுகளை செய்தார்.
அதன் படி, முதுமலை,டாப்சிலிப், சத்தியமங்கலம், களக்காடு ஆகிய புலிகள் காப்பகத்தில் இருக்கும் 28 யானைகளுக்கு கால்நடை மருத்துவ குழுவால் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த 28 யானைகளின் மாதிரிகள் உத்தரபிரதேசம் இஷாத்நகரின் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. தற்போது இதன் முடிவுகள் வெளிவந்துள்ளது. முதுமலை காப்பகத்தில் உள்ள 2 குட்டி யானைகளோடு சேர்த்து 28 யானைகளுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்று முடிவுகள் வந்துள்ளது.
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…