ஆள் பிடித்தாலும், வேல் பிடித்தாலும், ஆட்சியை பிடிக்க முடியாது – ஓபிஎஸ் விமர்சனம்

Published by
பாலா கலியமூர்த்தி

தேர்தலுக்காக வேல் பிடித்தாலும் சரி, ஆளை பிடித்தாலும் சரி ஆட்சியை மட்டும் பிடிக்க முடியாது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட குன்னத்தூர் பகுதியில் சுமார் 12 ஏக்கரில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா கோயிலை முதலமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் திறப்பு விழாவில் பங்கேற்றனர். இந்த திறப்பு விழாவில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.

பின்னர் கோ பூஜையில் பங்கேற்று மூத்த கட்சி நிர்வாகிகளுக்கு முதல்வர் 120 பசுக்களை தானம் செய்தார். நலிவுற்ற 234 கட்சி நிர்வாகிகளுக்கு பொற்கிழிகளை வழங்கியதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொது கூட்டத்தில் முதல்வர் தமிழக அரசின் சாதனை திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்.

இதையடுத்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அந்த தீயசக்திகள் வருகின்ற தேர்தலில் வெற்றிக்கு வழிதேட வட மாநிலத்தில் இருந்து  ஆள் பிடித்து வந்தார்கள். தற்போது வேறு வழியில்லாமல் கையில் வேலும் பிடித்து உள்ளார்கள். அவர்கள் ஆள் பிடித்தாலும் சரி, வேல் பிடித்தாலும் சரி தமிழ்நாட்டில் ஆட்சியை மட்டும் பிடிக்க முடியாது என்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன் என்று பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“இந்தியரின் விண்வெளி பயணம் திட்டமிட்டபடி நடைபெறும்” – ஸ்பேஸ் எக்ஸ்.!

“இந்தியரின் விண்வெளி பயணம் திட்டமிட்டபடி நடைபெறும்” – ஸ்பேஸ் எக்ஸ்.!

அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…

6 minutes ago

Ostrava Golden Spike : ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நீரஜ் சோப்ரா.!

மொராவியன்-சிலேசியன் : செக் குடியரசின் ஆஸ்ட்ராவா நகரத்தில் நடைபெற்ற 'ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' தடகளப் போட்டியில் இந்தியாவின் 'தங்க மகன்'…

18 minutes ago

“ஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகுதான் இந்து மதம் வந்தது” – விசிக தலைவர் திருமாவளவன்.!

சென்னை : விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் வழங்கும் விழா, நேற்றிரவு கலைவாணர் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில்…

38 minutes ago

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி.! இந்திய அணி தோல்விக்கு காரணம் என்ன.?

லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி (65) மற்றும்…

50 minutes ago

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…

11 hours ago

ஈரானில் தமிழக மீனவர்கள் – மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…

12 hours ago