தற்கொலை செய்து கொள்வது உங்களை ரொம்ப பிடிச்சவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் வாழ்நாள் தண்டனை என நடிகர் சூர்யா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதிலும் நீட் தேர்வு காரணமாக தொடர்ச்சியாக மாணவர்கள் பலர் தற்கொலை செய்து உயிரிழந்து வரும் நிலையில், மாணவர்களின் மரணத்திற்கு காரணமான நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி பல்வேறு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் மற்றும் பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சிலர், மாணவர்கள் எதற்கும் துணிந்து நிற்க வேண்டும் எனவும் அறிவுரை கூறி வருகின்றனர்.
தற்போதும் தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் சூர்யா அவர்கள், நீட் தேர்வு தற்கொலை குறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாணவ, மாணவிகள் துணிச்சலோடு இருக்க வேண்டும் எனவும், உங்களது உயிரை விட ஒரு பரிட்சை பெரிதல்ல எனவும் கூறியுள்ளார். உங்கள புரிந்து கொள்ளவும், நேசிக்கவும் இங்கு நிறைய பேர் இருக்கிறோம்.
நீங்கள் செய்து கொள்ளக்கூடிய தற்கொலை உங்களை மிகவும் பிடித்தவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் வாழ்நாள் தண்டனை என தெரிவித்துள்ளார். மேலும், மதிப்பெண், தேர்வு ஆகியவை மட்டும் உங்கள் வாழ்க்கை கிடையாது. சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அவ்வளவு விஷயங்கள் உள்ளது. நம்பிக்கையோடு தைரியமாக இருந்தால் வாழ்க்கையில் அனைவரும் ஜெயிக்கலாம்.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…