கேரளாவில் இருந்து தமிழகம் வருவோருக்கு ஆகஸ்ட் 5 முதல் பரிசோதனை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published by
பாலா கலியமூர்த்தி

கேரளாவில் இருந்து தமிழகம் வருவோருக்கு 5ம் தேதி முதல் கொரோனா தொற்று அறிவதற்கான பரிசோதனை செய்யப்படும் என அமைச்சர் அறிவிப்பு.

தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த வாரங்களாக குறைந்து இருந்தது. இதனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த நான்கு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனை குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. சென்னை விமான நிலையத்தில் ஓரிரு நாட்களில் அதிநவீன தொழில்நுட்பம் மூலம் 13 நிமிடங்களில் முடிவுகள் அறிவிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க, அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்டவற்றில் இருந்து எந்த பரிசோதனையும் இன்றி, தொற்று பாதித்தவர்கள் எளிதாக வருவதே காரணம் என்று தெரிவிக்கின்றனர். கேரளாவில், நாள்தோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர்.

இதனால், கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில், கேரளாவில் இருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் கொரோனா நெகடிவ் சான்று வைத்திருக்க வேண்டும் என்றும் 14 நாட்களுக்கு முன்பு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

எனவே, கேரளாவில் இருந்து தமிழகம் வருவோருக்கு, வரும் 5ம் தேதி முதல் கொரோனா தொற்று அறிவதற்கான, ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை கட்டாயம் என, அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்து உள்ளார். மேலும், மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

3 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

3 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

3 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

5 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

6 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

6 hours ago