தமிழகத்தில் சிறப்பு ரயில் சேவைக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கொரோனா பரவலை தடுக்க ஜூலை 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஏற்கனவே ஜூலை 1-ம் தேதி முதல் ஜூலை 15-ம் தேதி வரை பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுஇருந்தது.இதனிடையே நேற்று தமிழகத்தில் மீண்டும் தனியார் மற்றும் அரசு பேருந்து சேவை 31-ம் தேதி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டது. கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வரும் 31-ம் தேதி வரை பேருந்துகள் இயங்காது என தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில் தமிழகத்தில் சிறப்பு ரயில் சேவைக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,திருச்சி- செங்கல்பட்டு, மதுரை- விழுப்புரம், கோவை- காட்பாடி ரயில்கள் 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.ஏற்கனவே 15-ஆம் தேதி வரை ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில்,நீட்டிக்கப்பட்டுள்ளது . தமிழக அரசின் கோரிக்கையை அடுத்து, ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரத்து செய்யப்படும் ரயில்களுக்கான கட்டணம் பயணிகளுக்கு திரும்ப அளிக்கப்படும் என்றும் திருச்சி- மயிலாடுதுறை, அரக்கோணம்- கோவை, கோவை- மயிலாடுதுறை, திருச்சி- நாகர்கோயில் ரயில் சேவை வரும் 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளது.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…