ஆண்டு வரிக்கான காலக்கெடு ஏப்ரல் 10 லிருந்து ஜூன் 30 வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோன மற்றும் பொது முடக்கம் காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமல் காணப்படுகிறது. மேலும் மின்சார கட்டணம், வாகன வரி, வருமான வரி எனக் கட்டணங்கள் வரிகளைச் செலுத்துவதில் மக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக அரசு மக்களுக்கு உதவும் வகையில் சில சலுகைகளை அறிவித்து வருகிறது.
அதன்படி, பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான வாகன வரியை செலுத்த ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆண்டு வரிக்கான காலக்கெடு ஏப்ரல் 10 லிருந்து ஜூன் 30 வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. காலாண்டு வரி காலக்கெடு மே 15 லிருந்து ஜூன் 30 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. மேலும், குறிப்பிட்ட கால கெடுவிற்குள் செலுத்துவதில் ஏற்பட்ட சிரமங்கள் கருத்தில் கொண்டு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…