அரசு பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என ஆய்வு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் ரூ.100 கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முரளிதரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணையின்போது, அரசு பள்ளிகளில் பெற்றோர், ஆசிரியர் கழகம் கட்டணம் தவிர்த்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக பள்ளி கல்வி துறை ஆணையர் தெரிவித்துள்ளார். இதன்பின், அரசுப் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்தி, பள்ளிக்கல்வி ஆணையருக்கு அறிக்கை தர வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களில் ஒவ்வொரு பள்ளிகளிலும் ஆய்வு செய்து அறிக்கையை பள்ளிக்கல்வி ஆணையருக்கு சமர்பிக்க வேண்டும் என கூறி இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, கொரோனா தொற்று பரவலால் பள்ளிகள் இன்னும் திறக்கப்படாமல் இருக்கும் நிலையில், நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…