தமிழ்நாடு

சிலரின் தூண்டுதலால் தவறான பரப்புரை… அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

Published by
பாலா கலியமூர்த்தி

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ‘செய்யாறு சிப்காட் 3-வது அலகு’ விரிவாக்கத் திட்டத்துக்காக மேல்மா உட்பட 11 ஊராட்சிகளில் சுமார் 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை கைப்பற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. விளை நிலங்கள் சட்டத்துக்கு முரணான வகையில் பறிக்கப்படுவதாக குற்றம்சாட்டி பல்வேறு கிராம விவசாயிகள் ஒன்றுகூடி தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது, சிப்காட் விரிவாக்கத் திட்டத்தையே கைவிட வேண்டும் என வலியுறுத்தி மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் கடந்த ஜூலை 2-ம் தேதி முதல் 124 நாட்களுக்கு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. மேலும், எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 2-ம் தேதி காவல் துறையினர் தடையை மீறி விவசாயிகள் தங்கள் அடையாள ஆவணங்களை வருவாய்க் கோட்டாட்சியரிடம் ஒப்படைப்பதற்காக ஊர்வலமாக சென்றனர்.

அப்போது ஊர்வலத்தை தடுத்த போலீஸார், விவசாயிகளைக் கைதுசெய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு, அன்று மாலையே விடுவிக்கப்பட்டனர். ஆனால், விவசாயிகள் மண்டபத்தைவிட்டு வெளியேற மறுத்து உள்ளிருப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் மீது 11 பிரிவுகளின் கீழ் செய்யாறு போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர்.

சங்கரய்யாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுமா? மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பதில்!

இதையடுத்து, போராட்ட ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகம் உட்பட 22 பேர் கடந்த 4ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் 7 பேர் மீது நேற்று குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. விளை நிலங்களை கையகப்படுவதற்கும், விவசாயிகள் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை எடுத்ததற்கு கடும் எதிர்ப்பும், கண்டங்களையும் அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், திருவண்ணாமலையில் விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது தொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், தொழிற்சாலை வருவதால் வேலைவாய்ப்பு கிடைக்கும். செய்யாறு சிப்காட்டிற்கு 55 தொழிற்சாலைகள் வரவுள்ளன. பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டே சிப்காட் அமைக்கப்படுகிறது. சிலரின் தூண்டுதலின் பேரில் தவறாக பரப்புரை செய்யப்படுகிறது.

கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இருமடங்கு விலை வழங்கப்படுகிறது. சிப்காட் விவகாரத்தில் விவசாயிகள் மீது குண்டாஸ் போடப்பட்டதை பத்திரிகையில் படித்தும், தொகுதி MLA சொல்லி தான் அறிந்துகொண்டேன். அரசாங்கம் எந்த பணியையும் செய்ய கூடாது என திட்டமிட்டு போராட்டம் நடைபெறுகிறது. தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டால் தான் வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்க முடியும். கிருஷ்ணகிரியை சேர்ந்த அருள் தான் போராட்டத்தை தூண்டுகிறார். விவசாயிகளை வஞ்சிப்பதோ, ஏமாற்றுவதோ இந்த அரசின் நோக்கம் அல்ல என விளக்கமளித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…

4 seconds ago

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள்.! பிளே ஆஃப் செல்லும் அணி எது?

டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…

48 minutes ago

ஹைதராபாத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழப்பு.!

ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…

1 hour ago

விராட் கோலிக்கு பாரத ரத்னா வழங்கி கௌரவிக்க வேண்டும் – ரெய்னா.!

டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…

2 hours ago

“தவறை ஆய்வு செய்து, மீண்டு வருவோம்” – தோல்வி குறித்த இஸ்ரோ தலைவர் கூறியது என்ன?

ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…

2 hours ago

இந்தியாவின் 101வது ‘PSLV C-61’ ராக்கெட் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ அறிவிப்பு.!

ஆந்திரா : இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில், எல்லைப் பகுதிகளை கண்காணிக்க உதவும் EOS-9 (RiSat-…

3 hours ago