ஆண்மைக் குறைவு மற்றும் நரம்பு தளர்ச்சி ஆகிய சித்த மருத்துவத்தில் பிரபலமான டாக்டர் சிவராஜ் சிவகுமார் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக இன்று நள்ளிரவு 12 .5 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கக் கூடிய சித்த வைத்திய நிபுணர் ஆக விளங்கியவர் தான் டாக்டர் சிவராஜ் சிவகுமார். சேலத்தை தலைமை இடமாக கொண்டு இந்தியாவில் ஏழு தலைமுறைகளாக 206 வருடங்களுக்கு மேலாக சித்த மருத்துவத்தில் சாதனை புரிந்து வருகின்ற குடும்பம்தான் சிவராஜ் சித்த வைத்தியரின் குடும்பம். சித்த வைத்தியர் சிவராஜும் ஆண்மை குறைவு மற்றும் நரம்பு தளர்ச்சி காண பல்வேறு சித்த மருத்துவங்களை வழங்கி புகழ் பெற்ற மருத்துவராக விளங்கி வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சித்த வைத்தியர் சிவராஜ் சிவகுமார் சிகிச்சை பலனின்றி இன்று நள்ளிரவு 12 மணியளவில் உயிரிழந்துள்ளார். இவரது உடல் சேலம் சிவதாபுரத்தில் உள்ள அவரின் பூர்வீக இடம் ஆகிய வீரான அகஸ்தியர் மாளிகையில் தற்போது பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சித்த வைத்திய நிபுணர் சிவகுமாரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது நல்லடக்கம் இன்று மாலை நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…