தூத்துக்குடியில் எரிவாயு குழாய் பதிக்கும் அதிகாரிகளின் பணிகளை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டம்!

Published by
Rebekal
தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் தொழிற்சாலைக்காக எரிவாயு பதிக்கும் பணிகளில் ஈடுபட்ட அதிகாரிகளை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாகப்பட்டினத்திலிருந்து கடலோர மாவட்டங்கள் வழியாக தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தனியார் தொழிற்சாலைக்கு ஐசிஓஎல் எனும் நிறுவனம் சார்பில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் இறுதிகட்ட பணிகள் தூத்துக்குடி மாவட்டத்தின் குலையன்கரிசல், பொட்டல்காடு உள்ளிட்ட சுற்று வட்டார கிராம பகுதிகளில் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் விவசாய நிலங்கள் வழியாக குழாய் பதித்ததற்கு முதலில் பேசியபடி விவசாயிகளுக்கு இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் குழாய் பதிக்கும் பணிகளை விவசாயிகள் தடுத்து நிறுத்தி அதிகாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவரம் அறிந்து அங்கு வந்த போலீசார் நீதிமன்ற உத்தரவு வந்த பிறகே குழாய் பதிக்கும் பணிகள் நடைபெறும் என உறுதியளித்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
Published by
Rebekal

Recent Posts

ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?

ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…

28 minutes ago

பாமக மோதல் : பொறுப்பை பறித்த அன்புமணி… “அவருக்கு அதிகாரமில்லை” டென்ஷனான அருள்!

பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…

1 hour ago

த.வெ.க தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் எப்போது சுற்றுப்பயணம்? ஆதவ் அர்ஜுனா முக்கிய தகவல்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…

2 hours ago

அடுத்தடுத்து 100 கோடி படங்கள்…வெற்றியின் குஷியில் நடிகர் தனுஷ்!

சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…

2 hours ago

நேட்டோ உச்சி மாநாட்டிற்குச் சென்ற டிரம்ப்? இஸ்ரேல்-ஈரான் போர்நிறுத்தம் நீடிக்குமா?

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…

3 hours ago

“இந்த நேரத்தில் விராட் இல்லையே”…இந்தியா தோல்விக்கு பின் வேதனையடைந்த ரசிகர்கள்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.…

4 hours ago