தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் தொழிற்சாலைக்காக எரிவாயு பதிக்கும் பணிகளில் ஈடுபட்ட அதிகாரிகளை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகப்பட்டினத்திலிருந்து கடலோர மாவட்டங்கள் வழியாக தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தனியார் தொழிற்சாலைக்கு ஐசிஓஎல் எனும் நிறுவனம் சார்பில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் இறுதிகட்ட பணிகள் தூத்துக்குடி மாவட்டத்தின் குலையன்கரிசல், பொட்டல்காடு உள்ளிட்ட சுற்று வட்டார கிராம பகுதிகளில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் விவசாய நிலங்கள் வழியாக குழாய் பதித்ததற்கு முதலில் பேசியபடி விவசாயிகளுக்கு […]