தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை கிடைக்கும் என 10 லட்சம் பணம் பறித்த பெண் காவல் ஆய்வாளரின் ஜாமீன் மனு விசாரணையில் ஐகோர்ட் கிளை கருத்து.
சிவகங்கை மாவட்டம் இடையன்குடியை சேர்ந்த பேக் டெய்லரிடம் 10 லட்சம் ரூபாய் பறித்த வழக்கில், மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தி என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து கைது செய்யப்பட்டுள்ள பெண் காவல் ஆய்வாளர் வசந்தி தனக்கு ஜாமின் கோரி மனு ஒன்றை அளித்துள்ளார்.
இந்த வழக்கின் தற்போதைய நிலையை அறிய நீதிமன்றம் விரும்புவதாகவும், வசந்தி கைது செய்யப்பட்ட பின் நடைபெற்ற வழக்கின் விசாரணை குறித்து போலீஸாரிடம் அரசு வழக்கறிஞர் தகவல் பெற்று நாளை நீதிமன்றத்துக்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் நேற்று நீதிபதி புகழேந்தி அடங்கிய அமர்வு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், டெய்லரிடம் 10 லட்சத்தை பறித்து கைதாகியுள்ள பெண் காவல் ஆய்வாளர் வசந்தியின் ஜாமின் மனு மீதான விசாரணையின் போது கருத்து தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், யார் தவறு செய்தாலும் தண்டனை கிடைக்கும் வகையில் நடவடிக்கை இருக்க வேண்டும் எனவும், வசந்தியின் செயலால் அவர் சார்ந்த காவல்துறைக்கு களங்கம் ஏற்படுகிறது எனவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…