நெல்லை மாவட்டம் அறுமுகம்பட்டியைசேர்ந்த ஏசு இருதயராஜ் – புஷ்பலதா தம்பதிக்கு அண்மையில் இரட்டை குழந்தை பிறந்துள்ள்து. அதில் ஒன்று ஆண் குழந்தை, இன்னொன்று பெண் குழந்தை. இந்த தம்பதிக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. தற்போது இந்த இரட்டை குழந்தைங்களை சேர்த்து தற்போது 5 குழந்தைகள் ஆகிவிட்டது. இதனால் இருதயராஜ் அந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தையை விற்க முடிவு செய்துள்ளார்.
அதில் ஒரு பெண் குழந்தையை நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த தங்கராஜ் என்பவரிடம் விற்றுள்ளார். அதற்காக ஒரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் ரொக்கப் பணமும் 35 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகையும் விலை பேசியுள்ளார்.
பிறகு இந்த விஷயம் போலீசாருக்கு தெரியவரவே, அவர்கள் அந்த பெண் குழந்தையை தங்கராஜிடம் இருந்து மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும், இருதயராஜிடம் இருந்து 42 ஆயிரம் ரொக்க பணமும், தங்க நகையும் கைப்பற்றியுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக இருதயராஜ் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விஷயம் இருதயராஜ் மனைவி புஷ்பலதாவிற்கு தெரியாது என காவல்துறை சார்பில் கூறப்படுகிறது.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…