கருப்பு பட்டை அணிந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இன்று நடத்தவிருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் வேலை பார்க்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு வேலை பளு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று ஆரம்பித்து 3 மாதங்கள் கடந்துவிட்டது. இரவு பகல் பாராமல் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.
இந்த நிலையில்7 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு டாக்டர்கள் மற்றும் நர்சுகள் சங்க கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.
செவிலியர் பிரிசில்லா குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு, ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்றும் , கொரோனா பாதிப்புள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் சிகிச்சை பெற தனி இடம் ஒதுக்கவேண்டும் வேண்டும் மருத்துவ கூட்டமைப்பு கோரிக்கை வைத்தனர்.மேலும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அனைவருக்கும் சிறப்பு ஊதியமாக ஒரு மாத சம்பளம் வழங்க வேண்டும் எனவும் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் தற்போது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கருப்பு பட்டை அணிந்து தமிழகத்தில் இன்று நடத்தவிருந்த போராட்டத்தை வாபஸ் வாங்கியதாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் மற்றும் நர்சுகள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…