தேவேந்திரகுல வேளாளர் மசோதாவுக்கு மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையும் ஒப்புதல்.!

Published by
பாலா கலியமூர்த்தி

மக்களவையில் தேவேந்திர குல வேளாளர் மசோதா நிறைவேறியதை அடுத்து மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் ஆகிய 7 பட்டியலின உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரே பெயரில் அழைப்பதற்கான மசோதாவை மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்திருந்தது.

இதையடுத்து கடந்த 19ம் தேதி மக்களவையில். 7 பட்டியலின உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என பொதுப்பெயரை அழைப்பதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று, தமிழர்களுக்காக ஆதிதிராவிடர் பட்டியலில் திருத்தம் கொண்டுவரும் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் ஒப்புதல் அளித்து நிறைவேற்றப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று மாநிலங்களைவையில் மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலோட் இந்த மசோதாவை கொண்டுவந்த நிலையில், அதிமுக உறுப்பினர் நவநீதகிருஷ்ணன், காங்கிரஸின் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய அமைச்சர் ராமதாஸ் அதவாலே உள்ளிட்டோர் இதன் மீதான விவாதத்தில் பங்கேற்றனர். அதன்பின் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டு நிறைவேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அடிப்பதற்கு காவல்துறை எதற்கு? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு சரமாரி கேள்வி!

அடிப்பதற்கு காவல்துறை எதற்கு? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…

38 minutes ago

உங்களுடைய வெற்றியை பார்த்து தந்தை போல் நானும் மகிழ்ச்சி அடைகிறேன் – முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 'வெற்றி நிச்சயம்' என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி…

2 hours ago

சலுகைகள் இல்லைனா தென்னாப்பிரிக்காவுக்கே போயிருப்பார்…மஸ்கை கிண்டல் செய்த ட்ரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தொழிலதிபர் எலான் மஸ்க்கை கடுமையாக விமர்சித்து, அவர் அரசாங்கத்தின் மானியங்கள் மற்றும்…

2 hours ago

சொல்லியும் கேட்காத சின்னச்சாமி நிர்வாகம்…மைதானத்தின் Fuseஐ பிடுங்கிய EB!

பெங்களூர்: பெங்களூரின் எம். சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துமாறு பெங்களூர் மின்சார விநியோக…

2 hours ago

காவல் மரண வழக்குகளின் தற்போதைய நிலை என்ன? த.வெ.க தலைவர் விஜய் கேள்வி!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…

4 hours ago

தெலங்கானா ரசாயன தொழிற்சாலை தீ விபத்து : பலி எண்ணிக்கை 37 -ஆக அதிகரிப்பு!

ஹைதராபாத்: தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள பசாமைலாரம் தொழிற்பேட்டையில் சிகாச்சி கெமிக்கல்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் 2025 ஜூன்…

5 hours ago