கொரோனா ஊரடங்குக்கு பிறகு கோயம்பேட்டில் இன்று முதல் திறக்கப்படும் உணவு தானிய சந்தை.
தமிழகம் முழுவதிலும் கொரானா வைரஸ் பரவல் அதிக அளவில் இருந்ததால், கடந்த சில மாதங்களாக போக்குவரத்து கல்வித்துறை வணிக வளாகங்கள் மார்க்கெட்டுகள் என அனைத்துமே அடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில், சென்னையிலுள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் ஆறு மாதங்களுக்கு மேலாக இயங்காமல் இருந்த உணவு தானிய வளாகம் இன்று முதல் திறக்கப்படும் எனவும், காய்கறி சந்தை இருபத்தி எட்டாம் தேதி திறக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் இந்த அறிவிப்பை தொடர்ந்து உணவு தானிய வளாகம் இன்று திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பதாகவே கடைகள் சீரமைப்பு பணிகளும் நடந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாக கடைகள் பூட்டப்பட்டு இருந்ததால், தானியங்கள் அனைத்தும் வீணாகி விட்டதாகவும், குறைந்தபட்சம் ஆறு லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான உரிய இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும் எனவும் வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…