சென்னை மெரினா கடற்கரையில் அமையவுள்ள முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் நினைவிடத்தின் மாதிரிபுகைப்படம் வெளியானது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் அரும்பணிகளை போற்றும் விதமாக மெரினா கடற்கரை அருகே காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில், ரூ.39 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும் என சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் பேரவையில் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், கலைஞரின் வாழ்வின் சாதனைகள், சிந்தனைகளை, இளைய தலைமுறையினரும் அறியும் வகையில் நவீன விளக்கப்படங்களுடன் புதிதாக அமைக்கப்பட உள்ள கலைஞர் நினைவிடத்தின் மாதிரி வடிவமைப்பு புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்க்கும்போது மிக பிரமாண்டமாகவும், சூரியன் உதயமாகுவது போல் அமைந்துள்ளது. மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கதை எழுத்தாளர் என்று குறிக்கும் விதமாக அவரது நினைவிட மாதிரி வரைபடத்தில் இங்க் பேனா வடிவிலான ஒரு பிரமாண்ட தூண் உடன் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…
வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.…
டெல்லி : ஓலா, உபர் போன்ற டாக்ஸி நிறுவனங்கள் "Peak hours" நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு…
தேனி : சிவகங்கை இளைஞர் அஜித்குமாரை போலீசார் அடித்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் நிலையில், அதேபோல்…
வாஷிங்டன் : ஓபன் ஏ.ஐ. தலைவர் சாம் ஆல்ட்மன், ''சாட்ஜிபிடி-யை மக்கள் அதிகம் நம்புவதாகவும், ஆனால் செயற்கை நுண்ணறிவு (AI)…