சென்னை மெரினா கடற்கரையில் அமையவுள்ள முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் நினைவிடத்தின் மாதிரிபுகைப்படம் வெளியானது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் அரும்பணிகளை போற்றும் விதமாக மெரினா கடற்கரை அருகே காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில், ரூ.39 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும் என சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் பேரவையில் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், கலைஞரின் வாழ்வின் சாதனைகள், சிந்தனைகளை, இளைய தலைமுறையினரும் அறியும் வகையில் நவீன விளக்கப்படங்களுடன் புதிதாக அமைக்கப்பட உள்ள கலைஞர் நினைவிடத்தின் மாதிரி வடிவமைப்பு புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்க்கும்போது மிக பிரமாண்டமாகவும், சூரியன் உதயமாகுவது போல் அமைந்துள்ளது. மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கதை எழுத்தாளர் என்று குறிக்கும் விதமாக அவரது நினைவிட மாதிரி வரைபடத்தில் இங்க் பேனா வடிவிலான ஒரு பிரமாண்ட தூண் உடன் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…