முன்னாள் மத்திய அமைச்சர் மாரடைப்பால் மரணம்!

முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை அவர்கள் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை சென்னையில் உயிரிழந்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை, வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில், 1998 ஆம் ஆண்டு பாமக சார்பில் சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இவர் சுகாதாரத்துறை இணை அமைச்சராக பணியாற்றி வந்துள்ளார்.
பின் பாமகவில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்த இவர், 2001 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. யாக பணியாற்றினார். 74 வயதான முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை அவர்கள் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை சென்னையில் உயிரிழந்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக அரசின் கட்டுப்பாடுகளுக்கு இணங்கி, அவருடைய உடல் சொந்த ஊரான மதுராந்தகம் அருகே உள்ள இரும்பேடு கிராமத்தில் எளிய முறையில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025