பில்லி சூனியம் எடுப்பதாக கூறி ரூ.85 லட்சம் மோசடி செய்த கும்பல் கைது…!

Published by
லீனா

பில்லி சூனியம் எடுப்பதாக கூறி ரூ.85 லட்சம் மோசடி செய்த கும்பல் கைது.

தாம்பரம் கன்னடபாளையத்தை சேர்ந்த அந்தோணியம்மாள், கற்பகம் அனிதா ஆகியோர் சகோதரிகள் ஆவர். இவர்கள் மூவரும் கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் அனிதாவின் குடும்பம் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, மேற்கு தாம்பரம் பகுதியை சேர்ந்த பாத்திமா (40), அவரது தம்பி அபு ஹசன் (35), தங்கை ரஹமது பீவி நிஷா (29), அபு ஹசனின் நண்பர் ராஜேந்திரன் (41) ஆகியோர், அந்தோணியம்மாள், கற்பகம் மற்றும் அனிதா ஆகியோரை சந்தித்து உங்களுக்கு யாரோ பில்லி சூனியம் வைத்துள்ளனர் என்றும், அதனால்தான் கணவரை பிரிந்து தனியாக வாழ்கிறீர்கள், குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படுகிறது என்றும் கூறியுள்ளனர்.

மேலும் இந்த சூனியத்தை மந்திரம் மூலம் எடுத்து விட்டால் மீண்டும் உங்களது கணவர்கள் ஒன்று சேர்ந்து விடுவார்கள், குடும்ப பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்று ஆசை வார்த்தைகளை கூறி அவர்கள் மூவரையும் சூனியத்தை எடுக்க சம்மதிக்க வைத்துள்ளனர்.

இதனையடுத்து சூனியம் எடுப்பதாக கடந்த ஒரு ஆண்டாக மூவரிடமும் ரூ.85 லட்சம் ஏமாற்றி பெற்றுள்ளனர். இந்த பணத்தை வைத்து பாத்திமா, தாம்பரம் அடுத்த இரும்புலியூர் சந்திரன் நகரில் சொகுசு பங்களா ஒன்றை கட்டி வசித்து வந்துள்ளார்.

இதனை எடுத்து அந்தோணியம்மாள், கற்பகம், அனிதா மூவரும் தங்கள் ஏமாந்து போனதை உணர்ந்து காவல்துறையில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் அவர்கள் 4 பேரையும் நேற்று கைது செய்தனர். இதுபோல் இவர்கள் 4 பேரும் பலரிடம் லட்சக்கணக்கில் பறித்துள்ளதாகவும், அந்த பணத்தை மீட்டுத்தர போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago