திருமாவளவனை விமர்சித்த வழக்கில் காயத்ரி ரகுராமுக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தை கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கடந்த 2019-ஆம் ஆண்டு இந்து கோவில்களின் அமைப்புகள் குறித்து ஒரு கூட்டத்தில் பேசி இருந்தார் இது இந்து கோவில்களுக்கு எதிராக உள்ளதாக சர்ச்சை எழுந்தது.
இதனால், கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி நடிகை காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்தார். அதில், இந்துக்கள் திருமாவளவனுக்கு புடவை அனுப்புங்கள், திருமாவளவனுக்கு தைரியம் இருந்தால் நேருக்கு நேர் என்னிடம் இந்துக்கள் குறித்து பேச சொல்லுங்கள் என்று பல கருத்துகளை தெரிவித்தார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் காசி என்பவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், திருமாவளவன் குறித்து நடிகை காயத்ரி ரகுராம் அவதூறு கருத்துக்களை தெரிவித்தார். இது அவருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே நடிகை காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
காயத்ரி ரகுராமுக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி வழக்கை ஜூலை 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…