விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி ஜூன் 2-ம் தேதி தொடங்கும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு வருட காலமாகவே, பள்ளிகள் திறக்கப்படாமல், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம்தான் வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. சமீப காலமாக கொரோனா பரவல் குறைந்த நிலையில், கடந்த பிப்ரவரி 1 முதல் அனைத்து வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதே சமயத்தில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை தீவிரம் காட்டி வந்த நிலையில், 12ம் வகுப்புகளுக்கு நேற்றும் மற்றும் 10ம் வகுப்புகளுக்கு இன்றும் பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
மேலும், 11ம் வகுப்புக்கு மாதம் இறுதியில் பொதுத்தேர்வு தொடங்குகிறது. நேற்று தமிழகம் முழுவதும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது. நேற்று தொடங்கிய பொதுத்தேர்வு வரும் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், 3 லட்சத்து 98 ஆயிரத்து 321 மாணவர்கள், 4 லட்சத்து 38 ஆயிரத்து 996 மாணவிகள் என மொத்தமாக 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 பேர் தேர்வுகளை எழுதுகின்றனர் என தகவல் தெரிவிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக மொத்தம் 3,119 தேர்வு மையங்கள் தயார் நிலையில் இருக்கின்றன.
நேற்று நடைபெற்ற 12ம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வில் பங்கேற்க 8,37,311 பதிவு செய்திருந்த நிலையில், தேர்வில் 32,674 மாணவர்கள் பங்கேற்கவில்லை அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து 10ம் வகுப்புக்கு இன்று பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இந்த நிலையில், 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தற்போது 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி ஜூன் 2-ம் தேதி தொடங்கும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…
சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…
சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…