ஆண்களே உஷார்! டிக்டாக் மூலம் இளம்பெண் விரித்த வினோத வலையில் சிக்கி ரூ.97,000-ஐ இழந்த இளைஞர்!

Published by
லீனா

டிக்டாக் மூலம் ரூ.97,000-ஐ இழந்த இளைஞர். இளைஞரை ஏமாற்றிய இளம்பெண் சுசி கைது.

இன்று அதிகமான இளைஞர்கள் மற்றும் பெண்கள் டிக்டாக்கிற்கு அடிமையாகியுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். தங்களுடைய அதிகமான நேரத்தை டிக் டாக்கில் தான் செலவிடுகின்றனர். தற்போது ஊரடங்கை சாதகமாக பயன்படுத்தி, வீட்டில் இருப்பவர்கள் அதிகமாக இணையதளத்தில் தான் உலாவி வருகின்றனர். 

இந்நிலையில், மதுரையை சேர்ந்த 23 வயதான இளைஞர் ராமசந்திரன். இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். தற்போது விடுமுறை என்பதால், வீட்டில் இருக்கும் ராமசந்திரன், டிக்டாக் மற்றும் முகநூலில் அதிகமாக தனது நேரத்தை செலவிட்டு வந்துள்ளார். 

இதனையடுத்து, டிக்டாக்கில் திருப்பூரை சேர்ந்த சுசி என்கின்ற பெண், அம்முக்குட்டி என்கின்ற பெயரில் ராமசந்திரனுக்கு அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து, சுசி என்கின்ற அம்முக்குட்டியிடம் இவர் தனது அதீத அன்பை வெளிக்காட்டிய நிலையில், இவர்கள் இருவரும் முகநூல் பக்கத்திலும் உரையாடி வந்துள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சுசி, தனது  குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே, மருத்துவமனை செலவுக்கு பணம் வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

அவரது பேச்சை நம்பிய ராமசந்திரன், சுசியின் வங்கி கணக்கிற்கு ரூ.97,000 பணத்தை அனுப்பி வைத்துள்ளார். பணத்தை  பெற்றுக் கொண்ட சுசி அவருடன் பேசாமல் விட்டதுடன், இணைய பக்கத்திலும் தலைகாட்டாமல் இருந்துள்ளார். இதனையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராமசந்திரன், மதுரை எஸ்.எஸ்.காலனி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். 

அவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் சுசி மீது வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து தேட துவங்கினர். திருப்பூர், ஆலங்காடு பகுதியில் உள்ள அவரது வீட்டில் பதுங்கி இருந்த சுசியை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர் மோசடி செய்ய பயன்படுத்திய விலையுயர்ந்த செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி, சிறையில் அடைத்தனர். 

Published by
லீனா

Recent Posts

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

1 minute ago

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து – முதல்வர் மு.க ஸ்டாலின் நிவாரணத்தொகை அறிவிப்பு..!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…

32 minutes ago

இளைஞர் அஜித்குமார் மரணம்: மானாமதுரை டி.எஸ்.பி. சண்முக சுந்தரம் சஸ்பெண்ட்.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…

1 hour ago

இளைஞர் மரணம்: “தகவல் தெரிந்ததும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” – முதலமைச்சர் ஸ்டாலின்.!

சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…

1 hour ago

நெஞ்சை உலுக்கும் காட்சி.., அஜித் குமாரை போலீசார் பிரம்பால் தாக்கிய வீடியோ.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…

2 hours ago

போலீஸ் அடித்ததில் அஜித்துக்கு சிறுநீரில் ரத்தம் வந்தது” நேரில் பார்த்தவர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

சிவகங்கை :மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…

3 hours ago