தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் இனி ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்படும் என அமைச்சர் நாசர் அறிவிப்பு.
தமிழகத்தில் நியாயவிலை கடைகளில் 2 கோடி குடும்பங்கள் பயனடையும் வகையில் வருங்காலத்தில் ஆவின் தயாரிப்புகள் அனைத்தும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் சட்டப்பேரவையில் தெரிவித்தார். பால்வளம் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில், தமிழ்மொழி கல்வியில் 12-ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் பால் உரிமையாளர் வாரிசுகளுக்கு பரிசு வழங்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 3 சிறந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்படும் எனவும் அறிவித்தார். பால் உற்பத்தியாளர்களின் அனைத்து வகை இறப்பிற்கும், இறுதி சடங்கிற்கென ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். சேலம் கருமந்துறையில் ரூ.6 கோடி செலவில் உயர் மரபியல் திறனுள்ள கிடேரி கன்றுகள் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…