திமுக கடந்த தேர்தலில் வடிகட்டிய பொய்களை கூறி ஏமாற்றியது – ஜி.கே.வாசன்

Default Image

மக்களைக் குறித்து சற்றும் கவலைப்படாத கட்சி தான் திமுக என்று ஜி.கே.வாசன்  விமர்சித்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் அவர்கள், திருவையாறு தொகுதியில் பாஜக வேட்பாளரை ஆதரித்து, பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கடந்த தேர்தலில் வடிகட்டிய பொய்களை கூறி தாய்மார்களை ஏமாற்றியது தான் திமுக என்று குற்றம் சாட்டினார்.

திமுக சட்டமன்றத்திற்குள் செல்லும் போது உள்ளே ஒரு கால், வெளியே ஒரு கால் என உள்ளே வெளியே என இருந்து, இறுதியில் சட்டமன்றத்தை வெளிநடப்பு செய்து விடுவார்கள் என்றும், ஆட்சியாளர்கள் மக்களுக்கு என்ன திட்டங்களை கொடுக்கிறார்கள் என்பது கூட தெரிந்து கொள்ளாமல் செயல்படுவார்கள் என்றும்,  மக்களைக் குறித்து சற்றும் கவலைப்படாத கட்சி தான் திமுக என்றும் விமர்சித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்