முதலமைச்சரின் இரு கண்களாக இருப்பது கல்வியும், சுகாதாரமும் தான் என பேரவையில் அமைச்சர் புகழாரம்.
தமிழக சட்டமன்றத்தில் பதிலுரையின் போது பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர், இனி டிப்ளமோ படித்தவர்களும், Lateral Entry மூலம் அண்ணா பல்கலைக்கழகத்தில் சேரலாம் என அறிவித்தார். அதாவது, பாலிடெக்கனிக் முடித்த மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் 2ம் ஆண்டு சேரலாம் என தெரிவித்தார். பாலிடெக்கனிக் கல்லூரிகளில் 5 புதிய பாட பிரிவுகள் தொடங்கப்படும் என்றார்.
6 முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த 6 லட்சம் மாணவிகளின் உயர்கல்விக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் சிறைக்கைதிகள், திருநங்கைகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படும். தொழிற்சாலைகளில் பணிபுரியும் பட்டயப் படிப்பு படித்தவர்களுக்கு, பணிபுரிந்து கொண்டே பொறியியல் பட்டம் பயில்வதற்கான திட்டம் உருவாக்கப்படும் என்றும் அறிவித்தார்.
வரும் கல்வியாண்டில் 10 புதிய கலை & அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும். 56 அரசு கலை & அறிவியல் கல்லூரிகளின் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் எனவும் பதிலுரையில் தெரிவித்த அமைச்சர், 41 உறுப்புக் கல்லூரிகள், விரைவில் அரசுக் கல்லூரிகளாக மாற்றப்படும் எனவும் கூறினார். மேலும், பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுபவர் தமிழ்நாடு முதலமைச்சர் என்றும் கல்வியும், சுகாதாரமும் முதலமைச்சரின் இரு கண்களாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…