குட்நியூஸ்…மாணவர்களுக்கு உண்டி மற்றும் உறையுள் கட்டணம் ரூ.400 ஆக வழங்கப்படும் – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

Published by
Edison

கல்வி நிலையங்களுடன் இணைந்து விடுதிகளில் தங்கிப் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு வழங்கப்படும் உண்டி மற்றும் உறையுள் கட்டணத்தை ரூ.400 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

2021-2022 ஆம் ஆண்டிற்கான கல்வி மானியக் கோரிக்கை உதவித் தொகை திட்டங்களின் கீழ் கல்வி நிலையங்களுடன் இணைந்துள்ள விடுதிகளில் தங்கிப் பயிலும் பிற்படுத்தப்பட்டோர்,மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ கல்வி மாணவியருக்கு வழங்கப்படும் உண்டி மற்றும் உறையுள் கட்டணம் ரூ.400 ஆக உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

“2021-2022 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்களால் “விடுதிகளில் தங்கிப் பயிலும் பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு உண்டி மற்றும் உறையுள் கட்டணத்தை எவ்வித பாகுபாடின்றி வழங்கும் பொருட்டு. கல்வி உதவித் தொகை திட்டங்களின் கீழ் கல்வி நிலையங்களுடன் இணைந்துள்ள விடுதிகளில் தங்கிப் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு மாதாந்திர உண்டி மற்றும் உறையுள் கட்டணமாக தற்போது பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு 175 ரூபாய் தொழிற்கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு 350 ரூபாய், ஐடிஐ / பட்டயப்படிப்பு மற்றும் முதுகலை மாணவ, மாணவியருக்கு 225 ரூபாய் என்று வழங்கப்படுவதை அனைவருக்கும் 400 ரூபாயாக உயர்த்தி மொத்தம் 9 கோடி ரூபாய் கூடுதல் செலவில் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி,கல்வி நிலையங்களுடன் இணைந்துள்ள விடுதிகளில் தங்கிப் பயிலும் பிற்படுத்தப்பட்டோர்,மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ கல்வி மாணவியருக்கு வழங்கப்படும் உண்டி மற்றும் உறையுள் கட்டணம் ரூ.400 ஆக உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

25 minutes ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

2 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

2 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

3 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

5 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

6 hours ago