கூகுள் மேப்பில் வழிகாட்டப்போகும் அமிதாப் பச்சனின் குரல்.!

Published by
Castro Murugan

பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சனின் குரலை கூகுளை மேப்பின் வழிகாட்டுதல் குரலுக்கு உபையோகப்படுத்த அந்நிறுவனம்  முடிவு செய்துள்ளது .

இன்றைய காலக்கட்டத்தில் அண்ட்ராய்டு கைபேசி இல்லாத எவரையும் பார்க்க முடியாது.இதில் பல்வேறு செயலிகளை நம் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்துகிறோம், அதனுடன் பயணிக்கிறோம்.இதில் முக்கிய பங்கு வகிப்பது Google Map ஆகும். வழிகள் கேட்டு தேடி அலைந்த காலம் போய் இன்று நாம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சுலபமாக செல்ல  Google Map செயலியை பயன்படுத்துகிறோம். இதில் பல வசதிகள் உள்ளது அதில் குரல்வழி சேவை மூலம் நாம் செல்ல வேண்டிய இடத்தை கேட்டுக்கொண்டே செல்லலாம். ஆனால் இதுவரையில் கேட்ட கூகுள்  குரல் அயல்நாட்டவர் குரலால் இன்று வரை இயங்குகிறது .

இந்த வழக்கத்தை  கூகுள் நிறுவனம் இந்தியாவில் மாற்ற நினைத்துள்ளது. அதற்காக பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பட்சனின் குரலை கூகுள் மேப் குரலாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது .இன்னும் இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் ஏதும் கையெழுத்து ஆகவில்லை. அமிதாப் இதற்கு சம்மதம் தெரிவித்தால் அவருக்கு பெரும் தொகையை கொடுக்க கூகுள்  முடிவு செய்துள்ளது. அதன் பின்கூகுள் மேப்பில் அமிதாப்பின் குரல் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் ஒலிக்கும்.

அகில இந்திய வானொலியால் நிராகரிக்கப்பட்டவர் அமிதாப் பச்சன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது அவரது குரல் பல படங்களில் கம்பீரத்துடன் வசனம் பேசி இன்னும் ஒலித்து கொண்டுயிருக்கிறது .பச்சன், கடந்த 2005 ஆம் ஆண்டில் ஆஸ்கார் விருது பெற்ற மார்ச் ஆஃப் தி பெங்குவின் ஆவணப்படத்திற்கு தனது குரலை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், கூகிள் ஒரு பாலிவுட் பிரபலத்துடன் கைகோர்க்க இருப்பது இது முதல் முறை அல்ல  கடந்த 2018 ஆம் ஆண்டில்  வெளியான தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்  படத்தில் வரும் பாலிவுட் நடிகர் அமீர்கானின் கதாபாத்திரமான ஃபிரங்கியின் உரையாடல்களை அத்திரைப்பட திரைப்பட தயாரிப்பு நிறுவனமான யஷ் ராஜ் பிலிம்ஸ் (YRF) உடன்  ஏற்கனவே இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதுவே  அப்போதைய முதல் பெரிய ஒப்பந்தமாகும் .

Published by
Castro Murugan

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

5 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

5 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

6 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

6 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

8 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

8 hours ago