அரசு தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு மாநகர பேருந்தில் சலுகை – தமிழக அரசு உத்தரவு..!

Default Image

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் மாணவ, மாணவிகள் சென்னை மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி,கல்லூரிகள் போன்று தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து,தமிழக அரசு சில தளர்வுகளை வழங்கியது.அதன்படி,தொழிற்பயிற்சி நிலையங்கள் கடந்த ஜூலை 19 ஆம் தேதி முதல் செயல்பட அரசு அனுமதி அளித்தது.

இந்நிலையில்,சென்னையில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் முதலாம், இரண்டாம் ஆண்டு மற்றும் முதுநிலை பயிற்சி மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் சீருடையுடன் ஆகஸ்ட் மாதம் வரை இலவசமாக பயணிக்கலாம் என்று தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies