இரண்டாம் கட்ட கொரோனா அலை வந்தால் அதை எதிர்கொள்ள அரசு தயார் யூன அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த சில மாதங்களாக கோர தாண்டவமாடி வந்தது. ஆனால் தற்போது தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்துள்ளது என்று கூறலாம். இந்நிலையில் அரசும் கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் இரண்டு கோடி ரூபாய் செலவிலான 16 சிடி ஸ்கேன் கருவிகளுடன் கூடிய கொரோனா குணமடைந்ததற்குப்பின் சிகிச்சை பெறக் கூடிய வார்டுகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் திறந்து வைத்தார். திறந்து வைத்து பின் அந்த ஆய்வுகளை மேற்கொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் முப்பரிமான முறையில் கொரோனாவுக்கு சிகிச்சை வழங்கப்படுவதாகவும் இதனால் 90 சதவிகிதம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டு உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் கொரோனாவில் இரண்டாம் கட்ட அலை தமிழகத்திற்கு வந்தாலும் அதை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…