கொரோனா காரணமாக பல்கலை மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்த வேண்டும் என உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக தற்போது மீண்டும் தமிழகத்தில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளி கல்லூரிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து உயர் கல்வி துறை அரசு அறிவிப்பு கொண்ட அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.
உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா அவர்கள் வெளியிட்டுள்ள அரசாணை அறிக்கையில், உயர் கல்வித்துறையின் கீழ் இயங்க கூடிய அனைத்து கல்வி நிறுவனங்களும் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும், அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பணியாற்ற கூடிய ஆசிரியர்களும் தங்கள் வீட்டில் இருந்தபடியே மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக தேர்வுகளை நடத்த வேண்டுமெனவும், கல்வி தொடர்பான பயிற்சி நிறுவனங்களும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் பயிற்சி வகுப்புகளை ஆன்லைன் மூலம் தான் நடத்த வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…