பல்கலைக்கழங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த அரசாணை வெளியீடு!

Published by
Rebekal

கொரோனா காரணமாக பல்கலை மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்த வேண்டும் என உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக தற்போது மீண்டும் தமிழகத்தில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளி கல்லூரிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து உயர் கல்வி துறை அரசு அறிவிப்பு கொண்ட அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.

உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா அவர்கள் வெளியிட்டுள்ள அரசாணை அறிக்கையில், உயர் கல்வித்துறையின் கீழ் இயங்க கூடிய அனைத்து கல்வி நிறுவனங்களும் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும், அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பணியாற்ற கூடிய ஆசிரியர்களும் தங்கள் வீட்டில் இருந்தபடியே மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக தேர்வுகளை நடத்த வேண்டுமெனவும், கல்வி தொடர்பான பயிற்சி நிறுவனங்களும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் பயிற்சி வகுப்புகளை ஆன்லைன் மூலம் தான் நடத்த வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

“ஆர்யா என் வீட்டையே இடிச்சிட்டான்..” – இசை வெளியீட்டு விழாவில் உண்மையை உடைத்த சந்தானம்.!

“ஆர்யா என் வீட்டையே இடிச்சிட்டான்..” – இசை வெளியீட்டு விழாவில் உண்மையை உடைத்த சந்தானம்.!

சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…

5 minutes ago

மேடையில் கண்கலங்குவது ஏன்? முதல்முறையாக மவுனம் கலைத்த சமந்தா.!

சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…

41 minutes ago

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

2 hours ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

3 hours ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

4 hours ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

5 hours ago