தமிழ்நாட்டில் கூடுதலாக 3 மாவட்டத்தை சேர்க்க அரசு திட்டம்.? 37லிருந்து 40ஆக உயருமா.?

Published by
பாலா கலியமூர்த்தி
  • தமிழகத்தில் 32 மாவட்டங்கள் இருந்தது எனில், கடந்த ஆண்டில் புதிதாக 5 மாவட்டங்கள் சேர்க்கப்பட்டு 37-ஆக அதிகரிக்கப்பட்டது.
  • இந்நிலையில், தமிழக அரசு புதிதாக 3 மாவட்டங்களை நியமித்து 40 மாவட்டங்ககளாக உயர்த்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 32 மாவட்டங்கள் இருந்தது எனில், கடந்த ஆண்டில் புதிதாக 5 மாவட்டங்கள் சேர்க்கப்பட்டு 37-ஆக அதிகரிக்கப்பட்டது. அதாவது செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, தென்காசி, பின்னர் பெரிய மாவட்டமாக இருந்த வேலூரை பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய இரு புதிய மாவட்டங்களாகவும் அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்பாக உருவான புதிய மாவட்டங்களுக்கு நிர்வாக பணியை தொடங்கி வைத்து பின்னர் ஆட்சியர், போலீஸ் அதிகாரிகளாக எஸ்பிக்களை தேர்தெடுக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக அரசு புதிதாக 3 மாவட்டங்களை நியமிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது முதலமைச்சர் பழனிச்சாமி ஊரான எடப்பாடியை தனி மாவட்டமாக உருவாக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. மேலும் தமிழகத்தில் மாஸ்டர் என்றழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் இருந்து பொள்ளாச்சியையும், பின்பு தஞ்சாவூரை சேர்ந்த மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை இந்த ஆண்டிற்கான கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருவதால் , அதில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் 37 மாவட்டமாக இருந்த தமிழ்நாடு இந்த தகவல் முடிவினால் தமிழகத்தில் 40 மாவட்டங்களாக உயரும்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!

கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!

கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…

52 minutes ago

போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!

ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…

1 hour ago

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நிறுத்தம் அமல் – அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!

அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…

2 hours ago

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

12 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

13 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

13 hours ago