நரிக்குறவ தம்பதிக்கு பாலூற்றி பாதபூஜை செய்த அரசு போக்குவரத்து ஊழியர்கள்..!

Published by
லீனா

சென்னையில் நரிக்குறவ தம்பதிக்கு பாலூற்றி பாதபூஜை செய்த அரசு போக்குவரத்து ஊழியர்கள். 

கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கன்னியாகுமரியில், நரிக்குறவர் இனத்தை சேர்ந்த குடும்பத்தை அரசு பேருந்து ஓட்டுனர் பேருந்தில் இருந்து இறங்கி விட்ட சம்பவம் சர்ச்சையான நிலையில், சென்னையை சேர்ந்த அரசு போக்குவரத்து பணியாளர்கள் நரிக்குறவர் தம்பதிக்கு பாலூற்றி பாதபூஜை செய்துள்ளனர்.

பாரிமுனை சென்ற நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த தம்பதி பஸ் ஓட்டுனர் அப்துல் மன்னா, நடத்துனர் மோகன் ஆகியோரிடம், ‘பெரம்பூர் வீனஸ் செல்ல வேண்டும்’ எனக் கூற அவர்கள் அங்கிருந்து அவர்கள் செல்ல வேண்டிய பேருந்து இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அப்துல் மன்னா, மோகன் ஆகியோருடன், அவர்கள் செல்ல வேண்டிய  பஸ்சின் ஓட்டுனர் சதீஷ் பாபு, நடத்துனர் பூமணி ஆகியோர் சேர்ந்து நரிக்குறவர் தம்பதிக்கு காலில் பால் ஊற்றி, மஞ்சள், குங்குமம் வைத்து மாலை அணிவித்து தட்டில் கற்பூரம் ஏற்றி பூஜை செய்து அழைத்து சென்றனர்.

இதுகுறித்து மாநகர பஸ் ஊழியர்கள் கூறுகையில், சமீபகாலமாக பஸ் நடத்துனர் ஓட்டுனர் குறித்து மக்கள் மத்தியில் தவறான கண்ணோட்டம் உள்ளது. நாங்கள் அனைவரையும் மதிக்கிறோம். பயணிகளையும் சமமாக நடத்துகிறோம் என்பதை உணர்த்தவே இப்படி செய்தோம் என்று தெரிவித்துள்ளனர்.

Recent Posts

கடைசி நேரத்தில் சொதப்பிய ஹைதராபாத்! குஜராத் த்ரில் வெற்றி!

கடைசி நேரத்தில் சொதப்பிய ஹைதராபாத்! குஜராத் த்ரில் வெற்றி!

அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

28 minutes ago

GTvsSRH : சுழற்றிப்போட்ட சுப்மன் – பட்லர் புயல்…அதிரடி ஹைதராபாத்துக்கே இந்த அடியா?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

3 hours ago

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

5 hours ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

6 hours ago

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

7 hours ago

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

9 hours ago