தமிழ்நாடு நகர்ப்புற ஊரமைப்பு (திருத்தச்) சட்டம் 2020-ஐ அதிமுக அரசு கொண்டு வந்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று முக ஸ்டாலின் அறிக்கை.
நில மற்றும் கட்டட உரிமையாளர்களுக்குத் தெரியாமல் அவர்களது நிலத்தில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவும் அனுமதி வழங்கவும் உதவிடும் தமிழ்நாடு நகர்ப்புற ஊரமைப்பு (திருத்தச்) சட்டம் 2020-ஐ அதிமுக அரசு கொண்டு வந்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், நில மற்றும் கட்டட உரிமையாளர்களுக்கும் ஆரம்ப நிலையிலேயே தன்னுடைய நிலம் அல்லது கட்டடம் எடுக்கப்படுகிறது என்பதை அறிந்துகொள்ள உதவும் விதி-21 தொடர வேண்டும் என்று திமுக உறுப்பினர் எஸ்.ரகுபதி சட்டப்பேரவையில் வலியுறுத்தினார். இதனை அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை. புதிய திருத்த சட்டம் மூலம் கார்ப்ரேட் மற்றும் தனியாரின் மக்கள் விரோத திட்டங்களுக்கு அதிமுக அரசு முன் வந்துள்ளது.
விவசாயிகளின் நிலங்களை அவர்களுக்கு தெரியாமலேயே எடுத்துக் கொள்ளலாம் என்று சட்டம் கொண்டு வந்தது போன்று, பொதுமக்களின் கலந்தாய்வை ரத்து செய்யும் இந்த சட்டத் திருத்தமும் நெறிமுறைகளுக்கு முற்றிலும் எதிரானது. ஒவ்வொருவரின் சொத்துரிமை மற்றும் நிலா உரிமையை பாதிக்கும் தமிழ்நாடு நகர்ப்புற ஊரமைப்பு திருத்த சட்டம் 2020-க்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…