தமிழகத்தில் காலியாக இருக்கும் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங்களில் ஒய்வு பெற்ற அதிகாரிகளை நியமிக்கும் தமிழக அரசின் முடிவுக்கு விளக்கம் கேட்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 12,616 கிராம நிர்வாக பணியிடங்களில் 2,896 பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளன. அந்த காலி பணியிடங்களுக்கு முறையாக தேர்வு நடத்தாமல் ஒய்வு பெற்ற அதிகாரிகளையே மாதம் 15,000 ரூபாய் ஊதியத்தில் மீண்டும் பணியில் அமர்த்த கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. இந்த முடிவுக்கு எதிர்ப்பு, தெரிவித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதி வேலுமணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய எதிர் தரப்பு அரசு துறைகளில் 60 வயதிற்கு மேலானோர் ஒய்வு பெற வேண்டும் என்று விதி இருக்கும் நிலையில் ஒய்வு பெற்றவர்களை மீண்டும் எப்படி பணியில் அமர்த்த முடியும் என்று கேட்டனர். வாதங்களை கேட்ட நீதிபதி இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…