தமிழகத்தில் காலியாக இருக்கும் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங்களில் ஒய்வு பெற்ற அதிகாரிகளை நியமிக்கும் தமிழக அரசின் முடிவுக்கு விளக்கம் கேட்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 12,616 கிராம நிர்வாக பணியிடங்களில் 2,896 பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளன. அந்த காலி பணியிடங்களுக்கு முறையாக தேர்வு நடத்தாமல் ஒய்வு பெற்ற அதிகாரிகளையே மாதம் 15,000 ரூபாய் ஊதியத்தில் மீண்டும் பணியில் அமர்த்த கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. இந்த முடிவுக்கு எதிர்ப்பு, தெரிவித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதி வேலுமணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய எதிர் தரப்பு அரசு துறைகளில் 60 வயதிற்கு மேலானோர் ஒய்வு பெற வேண்டும் என்று விதி இருக்கும் நிலையில் ஒய்வு பெற்றவர்களை மீண்டும் எப்படி பணியில் அமர்த்த முடியும் என்று கேட்டனர். வாதங்களை கேட்ட நீதிபதி இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…