திருநெல்வேலி மாநகர முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் முருக சங்கரன் மற்றும் அவர்கள் வீட்டு பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக ஒருவர் கண்டறியப்பட்டுள்ளார்.
கடந்த 23 ம் தேதி வீட்டிற்கு உள்ளேயே மூவரும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. குற்றவாளிகளை தேட 3 தனி படைகளை அமைத்து நெல்லை மாநகர கமிஷ்னர் உத்தரவிட்டார். இதை அடுத்து குற்றவாளிகளை தேடி காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டனர். சங்கரன்கோவில் திமுக பெண் பிரமுகர் சீனியம்மாள் மீதும் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வந்தனர் காவலர்கள்.
இந்நிலையில், சம்பவம் நடந்த அன்று வீட்டை தாண்டி கார் ஒன்று அதிவேகத்தில் சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. விசாரணையில், அந்த கார் திமுக பிரமுகர் சீனியம்மாள் மகன் கார்த்திகேயனின் கார் என்று கண்டறிந்தனர். இதை அடுத்து, கார்த்திகேயன் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
மேலும், இந்த கொலையில் கார்த்திகேயன் சம்பந்தப்பட்ட இருப்பது உறுதியாகி இருப்பதாகவும் நாளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாகவும் தெரிகிறது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…