[Image Source : Vikatan/M.Aravind]
சேலம் இல்லத்தில் கட்சியினர் மத்தியில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினர் இபிஎஸ்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனை மற்றும் ஒற்றை தலைமை பிரச்னையை அடுத்து எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதுதொடர்பாக நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் தரப்பு மனு அளித்திருந்தது. இருந்தாலும், பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து, அதிமுகவின் திருத்த விதிகளும் ஏற்றுக்கொள்வதாகவும் அறிவித்திருந்தது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை அடுத்து, இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 69வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகளும், அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் கட்சியினர் மத்தியில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினர் இபிஎஸ். பிரமாண்ட மாலையை பத்து பேர் தூக்கி வந்து எடப்பாடி பழனிசாமிக்கு அணிவித்தனர். இதுபோன்று, அதிமுக பொதுச்செயலாளர் ஈ.பி.எஸ் பிறந்தநாளையொட்டி முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி மண் சோறு சாப்பிட்டார்.
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…
டெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தால் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆம்…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…