1000 சிறுபான்மையின மக்களுக்கு இலவச மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம் வழங்குவதற்கு நிர்வாக ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினரைச் சேர்ந்த 1000 பேருக்கு இலவச மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள் வழங்கவும்,அதற்காக 45 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:
“கடந்த 2021-2022 ஆம் ஆண்டிற்கான பிற்படுத்தப்பட்டோர்,மிகப் பிற்படுத்தப்பட்டோர்,சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானியக்கோரிக்கையின் போது சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள் பின்வரும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள்.
“சிறுபான்மையினருக்கு 1000 இலவச மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள் 45 இலட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்” என்று அறிவித்தார்.
பொதுவாக,ஏழ்மை நிலையிலுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினரின் பொருளாதார நிலையினை மேம்படுத்த மின் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.இதே போன்று சிறுபான்மையின மக்களின் பொருளாதார மற்றும் கல்வி நிலைகளில் திட்டமிடப்பட்ட உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்கெனவும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திக் கொள்ளவும் இலவச மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்களை வழங்கிடலாம் என சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் அரசுக்கு பரிந்துரை செய்தார்.
இந்நிலையில்,சிறுபான்மையின நல இயக்குநரின் பரிந்துரையை நன்கு கவனமுடன் பரிசீலித்து, அதனை ஏற்று 2021-22 ஆம் ஆண்டிற்கான இத்துறையின் மானியக் கோரிக்கையில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பினை செயற்படுத்தும் விதமாக 1000 சிறுபான்மையின பயனாளிகளுக்கு மின்மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரம் வழங்குவதற்கு நிர்வாக ஒப்புதல் அளித்து அரசு ஆணையிடுகிறது.
மேலும்,சிறுபான்மையின மக்களுக்கு இலவச மின்மோட்டாருடன் கூடிய 1000 தையல் இயந்திரங்கள் வழங்கிட தமிழ்நாடு ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப்புள்ளிச் சட்டம் 1998 மற்றும் தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளி விதிகள் 2000 (Tamil Nadu Transparency in ‘Tender Act 2000) ஆகியவற்றைப் பின்பற்றி விலைப்புள்ளிகள் பெற்று ரூ.45.00,000/- ரூபாய் நாற்பத்தைந்து இலட்சம் மட்டும் செலவில் நிதி ஒப்பளிப்பு கோரி கருத்துருவினை அரசுக்கு அனுப்புமாறு சிறுபான்மையின நல இயக்குநர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
குறிப்பாக,இத்திட்டத்தின் கீழ் சிறுபான்மையினர்களுக்கு கீழ்க்கண்ட தகுதிகளுக்குட்பட்டு தையல் இயந்திரங்கள் வழங்கப்படும்:
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…
கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில்…
மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் அடுத்தடுத்த இரண்டு நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். சல்மானின் வீட்டிற்கு வெளியே…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
சென்னை : நடிகர் சண்முக பாண்டியன் வெளியிட்டுள்ள சமீபத்திய பதிவில் படை தலைவன் திரைப்படம் நாளை (மே 23ம் தேதி)…