graduation ceremony [image source:x@sunnewstamil]
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை திருச்சி விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி, திருச்சி – புதுக்கோட்டை சாலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 38-ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். இந்த பட்டமளிப்பு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது, 1,528 மாணவர்களுக்கு வழங்குவதன் அடையாளமாக 30 மாணவ, மாணவிகளுக்கு மட்டும் பட்டங்களை வழங்கிய பிறகு பிரதமர் மோடி, பல்வேறு தலைப்புகளில் முனைவர் பட்டம் பெற்றவர்களையும் கெளரவித்தார். இதன்பின், எனது மாணவ குடும்பமே என்றும் வணக்கம் எனவும் தமிழில் சில சொற்களை கூறி பிரதமர் மோடி உரையாற்றினார். புதியதோர் உலகம் செய்வோம் என்ற பாரதிதாசனின் கவிதை வரிகளை மேற்கோள் காட்டியும் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு.! முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.!
அவர் கூறியதாவது, மிக அழகிய மாநிலமான தமிழ்நாட்டில் இருப்பது மகிழ்ச்சி இருப்பது. 2024 புத்தாண்டில் நான் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி இந்த பட்டமளிப்பு விழா இதுவாகும். அதுவும், பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் முதல் பிரதமர் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். இது எனக்கு சிறப்பான ஒன்று. வழுவான கட்டமைப்பின் காரணமாக மொழி, அறிவியல் போன்ற அனைத்து துறைகளிலும் இந்த பல்கலைக்கழகம் சிறந்து விளங்குகிறது.
பண்டைய காலத்தில் காஞ்சி, மதுரை நகரங்கள் கல்வியில் சிறந்து விளங்கின. உலகமே இந்தியாவை உற்றுப் பார்க்கிறது. இந்தியாவை உலக நாடுகள் நம்பிக்கையோடு பார்த்துக் கொண்டிருக்கிறது. வரலாற்றில் பல மாற்றங்கள், சாதனைகளுக்கு காரணமாக இருந்தவர்கள் மாணவர்கள். சங்க காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட முறைதான் தற்போதும் கல்வித்துறையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மேலும், பொருளாதார வளர்ச்சியில் இந்தியா சாதனை படைத்தது வருகிறது. கற்ற கல்வியும், அறிவியலும் வேளாண்மையை மேம்படுத்த, விவசாயிகளுக்கு கை கொடுக்க வேண்டும். மாணவர்கள் கல்வி கற்பதோடு நிற்காமல் சகோரத்துவம், நல்லிணக்கத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் பல்கலைக்கழகங்கள் சிறந்து விளங்கினால் நமது நாடும் சிறந்து விளங்கும் எனவும் தெரிவித்தார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…