7.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பு திராவிட மாடல் அரசின் சமூக நீதி பயணத்தின் ஹாட்ரிக் வெற்றி என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முந்தைய அதிமுக ஆட்சியின் போது, மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்தும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இந்த இட ஒதுக்கீட்டை வழங்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கிய சட்டம் செல்லும் எனத் தீர்ப்பளித்தனர். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 7.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பு திராவிட மாடல் அரசின் சமூக நீதி பயணத்தின் ஹாட்ரிக் வெற்றி. மருத்துவ படிப்புக்கான அகில இந்திய இட ஒதுக்கீட்டில் ஒபிசிக்கு 27% இடஒதுக்கீட்டை உறுதி செய்தது முதல் வெற்றி.
மருத்துவ மேற்படிப்பில் ஊரக அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழக்கில் தமிழக அரசுக்கு 2-ஆவது வெற்றி. சமூகநீதி பயணத்தில் இன்னும் பல காலங்களை உறுதியுடன் எதிர்கொள்வதற்கான ஊக்கத்தை, உத்வேகத்தை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…
சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…