5 மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 2019-2020 கல்வியாண்டு முதல் தமிழக அளவில் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.இதற்கு பலத்த எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்ட நிலையில் கிராமபுற மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் மேலும் அவர்கள் தங்கள் கல்வியை பாதியிலேயே நிறுத்தும் நிலையை இந்த பொதுத்தேர்வு உருவாக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் மீண்டும் தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் அதிகமாக பெருகுவார்கள் என்று அதிர்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை வா.உ.சி. சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அல்லிமுத்து என்பர் 2012 – 2013 ஆண்டில் தனக்கு வழங்கப் பட்ட நல்லாசிரியர் விருதினை திருப்பி ஒப்படைக்க முடிவு செய்து உள்ளார். விருதினை திருப்பி ஒப்படைக்க அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற அவர் ஆட்சியர் மலர்விழியிடம் தனது நல்லாசிரியர் விருதை திருப்பி ஒப்படைத்தார்.ஆனால் விருதினை வாங்க மருத்த ஆட்சியரோ ஓய்வுப்பெற்ற தலைமை ஆசிரியரின் .
கோரிக்கையை தமிழக அரசுக்கு பரிசீலனை செய்வதாக உறுதி அளித்தார்.இது குறித்து ஓய்வுப்பெற்ற அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் கூறுகையில் ஒரு வாரத்திற்குள் தனது கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றவில்லை ஆனால் எனக்கு வழங்கிய விருதை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பி வைப்பேன் என்று கூறிய உள்ளார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…