Nivar strom: கடலூரில் வெளுத்து வாங்கும் கனமழை.. அதிகபட்சமாக 24.2 செ.மீ மழை பதிவு!

Published by
Surya

கடலூரில் சூறாவளி காற்று, இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி தீர்க்கும் நிலையில், 1 மணிநேரத்தில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

வங்கக்கடலில் உருவான நிவர் புயல், அதீ தீவீரப்புயலாக வலுப்பெற்று, தற்பொழுது 16 கி.மீ வேகத்தில் புதுச்சேரிக்கு அருகே கரையை கடந்து வருகிறது. புயல் கடக்க தொடங்கிய இடத்தில், 120 கி.மீ முதல் 140 கி.மீ வரை பலத்த காற்று வீசி வருகிறது. இந்த நிவர் புயலின் எதிரொலியாக கடலூர் மாவட்டத்தில் சூறாவளி காற்று, இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் பல இடங்களில் வெள்ளநீர் புகுந்தது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரையும் அருகில் உள்ள முகாமில் தங்கவைக்கப்பட்டனர். மேலும், மழையில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்கும் பணியில் மீட்புப்பணியினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்த புயல் காரணமாக இன்று காலை முதல் கடலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

அதன்படி, இன்று காலை 8.30 மணி முதல் இரவு 12.30 மணிவரை கடலூரில் 24.2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கடலூரை தொடர்ந்து, புதுச்சேரியில் 19.3 செ.மீ மழையும், சென்னையில் 8.9 செ.மீ, காரைக்கால் 8.4 செ.மீ, நாகை 6.3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதுமட்டுமின்றி, கடந்த 1 மணி நேரத்தில் கடலூரில் மட்டும் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
Surya

Recent Posts

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்.., கேப்டன் சதம்.. துணை கேப்டன் அரைசதம்.!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்.., கேப்டன் சதம்.. துணை கேப்டன் அரைசதம்.!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் இந்தியா அபாரமாக விளையாடி ரன்களை குவித்தது. தொடக்க வீரர்…

34 minutes ago

அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம்.., எதிர்பார்ப்புக்கு மத்தியில் டக் அவுட்டான சாய் சுதர்சன்.!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…

13 hours ago

இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?

ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…

14 hours ago

ஓய்ந்தது மழை.? ஜூன் 22 வரை அதிகரிக்கும் வெயில்.., வானிலை மையம் எச்சரிக்கை.!

சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…

14 hours ago

தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!

சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…

15 hours ago

”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!

மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…

16 hours ago