சென்னையில் கனமழையால் 4 சுரங்கபாதைகள் மூடப்பட்டது என்று பெருநகர போக்குவரத்து காவல்துறை தகவல்.
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மழைநீர் தேங்கியுள்ளதால் 4 சுரங்கபாதைகள் மூடப்பட்டது என்று பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை,மேட்லி சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை, ஆர்பிஐ சுரங்கப்பாதை மழைநீர் பெருக்கு காரணமாக மூடப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பேருந்துகள் மெதுவாக செல்கிறது என்று கூறியுள்ளது. இதனிடையே, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மணி நேரத்திற்கு அதி கனமழை மழை என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதால் அதை சீர் செய்யும் பணி நடக்கிறது என்றும் சுரங்கப்பாதையில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி தொடங்கியுள்ளது எனவும் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் தெரிவித்தார். கனமழை காரணமாக மின்சாரம் தாக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…