சென்னையில் கனமழையால் 4 சுரங்கபாதைகள் மூடப்பட்டது என்று பெருநகர போக்குவரத்து காவல்துறை தகவல்.
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மழைநீர் தேங்கியுள்ளதால் 4 சுரங்கபாதைகள் மூடப்பட்டது என்று பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை,மேட்லி சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை, ஆர்பிஐ சுரங்கப்பாதை மழைநீர் பெருக்கு காரணமாக மூடப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பேருந்துகள் மெதுவாக செல்கிறது என்று கூறியுள்ளது. இதனிடையே, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மணி நேரத்திற்கு அதி கனமழை மழை என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதால் அதை சீர் செய்யும் பணி நடக்கிறது என்றும் சுரங்கப்பாதையில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி தொடங்கியுள்ளது எனவும் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் தெரிவித்தார். கனமழை காரணமாக மின்சாரம் தாக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…
டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார், ஆனால் இவற்றுக்கான செலவை அமெரிக்கா…
லண்டன் : 2025 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இத்தாலியின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (14-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
ஆந்திரா : அன்னமய்யா மாவட்டத்தில், ரெட்டிபள்ளி செருவு கட்டா அருகே புல்லம்பேட்டை மண்டலத்தில் 2025 ஜூலை 13 அன்று நடந்த கோர…