தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களில் இன்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் இன்று ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மேலும், மேற்கு வங்கத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும், அசாமில் மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றது.
தமிழகம்:
தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு, காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை நடைபெற்றது.இதில் பதிவான வாக்கு சதவீதம் 71.79% ஆகும் .
இந்த தேர்தலில் 3,08,38,473 ஆண் வாக்காளர்களும், 3,18,28,727 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 6,26,67,200 பேர் தகுதிபெற்றிருந்தனர்.
கேரளா:
கேரளாவில் உள்ள 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை நடைபெற்றது.இதில் பதிவான வாக்கு சதவீதம் 70.04% ஆகும். கேரளாவில் மொத்தம் 2.75 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை நடைபெற்ற வாக்கு சதவீதம் 78.13% ஆகும்.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. புதன்கிழமை காலை 7 மணி வரை தடை உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாம்:
அசாம் மாநிலத்தில் மொத்தமாக 126 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளது. இதில் முதல் கட்டமாக கடந்த 27-ம் தேதி 47 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. 2-வது கட்டமாக கடந்த 1-ம் தேதி 39 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.
அதனைத் தொடர்ந்து எஞ்சியுள்ள 40 தொகுதிகளுக்கு மூன்றாம் மற்றும் இறுதிக்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.அஸ்ஸாமில் (3வது மற்றும் இறுதி கட்டம்) காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை நடைபெற்ற வாக்கு சதவீதம் 82.29% ஆகும்.
மேற்கு வங்கம்:
மேற்குவங்கத்தில் மொத்தமாக 294 தொகுதிகள் உள்ள நிலையில், அங்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் இரண்டு கட்டங்கள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், 31 தொகுதிகளுக்கான 3வது கட்டம் நடைபெற்றது.இதில் காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை நடைபெற்ற வாக்கு சதவீதம் 77.68% ஆகும்.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…