கொரோனா நிவாரண நிதி விவரத்தை வெளியிட – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு .!

Published by
murugan

முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதி மூலம் பெறப்பட்ட நிதி எவ்வளவு என்ற விவரத்தை வெளியிட  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு 

தமிழகத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு எவ்வளவு தொகை வந்தது.? என்ற விவரங்கள்  அறிவிக்கவில்லை எனக் கூறி வழக்கறிஞர் கற்பகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அவர் அளித்த அந்த மனுவில், முதலமைச்சர் பொது நிவாரண நிதி வழங்கியவர்கள் யார் யார்..?  என்பது குறித்த எந்த விவரங்களும் குறிப்பிடப்படவில்லை எனவே முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வந்த தொகையை பொதுமக்கள் தெரிந்துகொள்ள இந்த விவரங்களை வெளியிட உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறினார்.

சமீபத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர்  வழக்கறிஞர் கூறுகையில்,  மற்ற மாநிலங்களில் பொது நிவாரண நிதிக்கு வந்த தொகை குறித்து வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில்தான் வெளியிடப் படவில்லை என கூறினார். இதுகுறித்து  பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில்,  இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு யார் யார் எவ்வளவு ..?தொகை கொடுத்திருக்கிறார்கள் என்பது குறித்த முழு விவரத்தை தமிழக அரசு இணையதளத்தில் 8 வாரதத்திற்குள் வெளியிட தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Published by
murugan

Recent Posts

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…

4 hours ago

போர் எப்போது.? ”நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது” – டிரம்ப் சூசக பதில்.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…

4 hours ago

தமிழகம் முழுவதும் ஜூலை 9ம் தேதி டாஸ்மாக் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் பணியாளர் சங்கம்.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…

5 hours ago

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…

6 hours ago

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…

7 hours ago

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…

7 hours ago