மதுரை மாவட்டத்தில் வீடுவீடாக சென்று தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த நிலையில், தொற்று பரவலை தடுக்கும் வண்ணம் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் வீடுவீடாக சென்று தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக மதுரை மாநகராட்சி பகுதிகளில் தான் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்துமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிற நிலையில், 4 செவிலியர்கள் கொண்ட 5 குழுக்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இத்திட்டமானது, முகாம்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்த இயலாதவர்களுக்காக தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி நாள்தோறும் 1,000 பெரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…