கொரோனா தொற்றுக்கு ஆர்செனிகம் ஆல்பம்-30 என்ற ஹோஹாமியோபதி மருந்து பயன்படுத்தப்பட்டு வருவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
உலக முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்தை கண்டறிவதில் ஆய்வாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதேசமயம், மலேரியாவை குணப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை பரிசோதனை அடிப்படையில் மருத்துவர்கள் பரிந்துரைத்து வருகின்றனர். அதேபோல், பிளாஸ்மா சிகிச்சை, மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் பரிந்துரைகள், கபசுர குடிநீர் உள்ளிட்டவைகளும் கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் ஹோமியோபதி மருந்தான ஆர்செனிகம் ஆல்பம் 30 என்ற மருந்தை சாப்பிட மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரை செய்தது. அதன்படி, அந்த மருந்தை தொடர்ந்து 3 நாட்களுக்கு வெறும் வயிறில் சாப்பிட வேண்டும். ஒரு மாதத்திற்கு பின்னர் இதே முறையில் மீண்டும் மருந்து சாப்பிட வேண்டும் என தெரிவித்தது. கேரளா, பஞ்சாப், தெலங்கானா, குஜராத் ஆகிய மாநிலங்கள் இந்த பரிந்துரையை ஏற்று பின்பற்றி வருவதாகவும், தமிழகமும் இந்த முறையை பயன்படுத்த வேண்டும் எனவும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
இந்நிலையில், வழக்கு விசாரணையின் போது, கொரோனாவுக்கு Arsenicam album 30 என்ற ஹோமியோபதி மருந்தை மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்தது. அதனை பயன்படுத்த தமிழக அரசு அரசாணை பிறப்பித்து அமல்படுத்தி வருகிறது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து ஹோமியோபதி மருந்து கடைகளிலும் இந்த மருந்து கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரை செயல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அளித்த விளக்கத்தை ஏற்று வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…