வீட்டு வாடகை பிரச்சனையில் ஒருவர் தீக்குளித்த விவகாரம். புழல் காவல் ஆய்வாளர் பென் ஷாமை சஸ்பெண்ட் செய்யபட்டார்.
திருவள்ளூர் மாவட்டம், புழல் பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவருக்கு சொந்தமான வீட்டில் சீனிவாசன் என்பவர் தனது குடும்பத்துடன் வாடகை கொடுத்து வசித்து வந்துள்ளார். பெயிண்டராக வேலைபார்த்துவந்த சீனிவாசனுக்கு கொரோனா ஊரடங்கினால் சரிவர வேலை இல்லாததால், வாடகை கொடுக்க முடியவில்லை.
இதுகுறித்து வீட்டு உரிமையாளர் ராஜேந்திரன் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து புழல் காவல் ஆய்வாளர் பென் ஷாம் சீனிவாசனை விசாரித்துள்ளார். அப்போது சீனிவாசனை காவல் ஆய்வாளர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அவமானம் தாங்க முடியாத சீனிவாசன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
இதனை அடுத்து உடலில் 85 சதவீத தீக்காயங்களுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார். இறப்பதற்கு முன்னர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதனை அடுத்து, புழல் காவல் ஆய்வாளர் பென் ஷாமை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…